இதை விட வேறு என்ன அவனுக்கு தந்துவிட முடியும் ?

பூக்களோடு யுத்தம் 
புன்னகையோடு அணைப்பு
தன்னை தேடி வந்த வண்டுக்கு 
தேன் அமிர்த உணவு 

வாடி 
கிடந்த பூ தானே 
வாசம் வீச நினைத்தது தவறா?

கன்னி 
மனம் போல் தானே 
இந்த பூ வின் மனமும் எங்கும் ?

ஏன் 
வண்டுக்கு 
தேன் அமிர்த உணவு தெரியுமா?

பூவாய் 
பூமியில் பூத்த மலர்
கனியாய் மாற வேண்டாமா?

தன் கற்புக்கு 
நயம் வீச வேண்டாமா ?

எங்கோ
இருந்த மகரந்த தூளை 
தன் உடம்பில் தீட்டிய 
வண்டுக்கு 

பூவால் என்ன பரிசு 
இதைவிட தந்து விட முடியும்?

அதான் 
தன் இன்பமான 
தேனை எடுத்து செல்ல 
வண்டுக்கு அனுமதி தந்தது.

No comments:

Powered by Blogger.